குடியாத்தம் ஜூலை 31
வேலூர் மாவட்டம் குடியாத்தம் 35 வது வார்டு ராஜ கணபதி நகர் ஜே ஜே நகர் திருமலை கார்டன் சுண்ணாம்பு
பேட்டை பகுதியில் உள்ள பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை நகராட்சி துவக்க பள்ளிக்கு அனுப்ப மறுப்பு தெரிவித்து இன்று காலை பள்ளிக்கு முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குடியிருப்பு பகுதி மற்றும் நகராட்சி துவக்கப்பள்ளி எதிரில் புதியதாக மதுபான கடை திறக்கப்பட உள்ளதால் எங்கள் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு இல்லை எனவே எங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் என்று எதிர்ப்பு தெரிவித்து பள்ளிக்கு வெளியே நின்று கொண்டு பிள்ளைகளுக்கு பாதுகாப்பு வேண்டும் இதை எழுத்து மூலமாக கொடுத்தால் மட்டுமே அனுப்புவோம் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் தகவல் அறிந்தவுடன் குடியாத்தம் நகர மன்ற தலைவர் எஸ் சௌந்தரராஜன் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார் அப்போது மதுபான கடையை வேறு இடத்திற்கு மாற்ற முயற்சி செய்து உள்ளோம் எனவே தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புமாறு கேட்டுக் கொண்டார்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment