குடியாத்தம் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்! - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday 31 July 2024

குடியாத்தம் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்!

குடியாத்தம் ஜூலை 31 

வேலூர் மாவட்டம் குடியாத்தம் மக்களுடன் முதல்வர் என்ற திட்டத்தின் மூலம் பொதுமக்கள் அதிகமாக அணுகும் அரசுத்துறைகளான மின்வாரிய துறை ஊரக வளர்ச்சி துறை வருவாய் துறை வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை உள்ளிட்ட துறைகளில் சார்ந்த குறிப்பிட்ட சேவைகள் தொடர்பாக பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெற அரசின் பல்வேறு துறைகளிடமிருந்து 44 வகையான தனிநபர் சேவைகள் கோரி அளிக்கும் மனுக்கள் ஜீலை 11 முதல் செப்டம்பர் 15 வரை காலை 10 மணிமுதல் மாலை 03 மணிவரை மனுக்கள் பெறபட உள்ளது. என்று வேலூர் மாவட்ட நிர்வாகம் அறிவுறித்தியதை தொடர்ந்து வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 50 கிராம ஊராட்சிகளுக்கு மனுக்கள் பெற 08 கட்டமாக தேதிகள் இடம் என ஒதுக்கீடு செய்து பட்டியல் வெளியானது பட்டியலை தொடர்ந்து நேற்று குடியாத்தம் ஒன்றியத்திற்கு உட்பட்ட உள்ளி கீழ்பட்டி  செம்பேடு கருணிகிசமுத்திரம் அனங்கநல்லூர் வளத்தூர் குளிதிகை ஆகிய ஊராட்சிகளுக்கான மக்களுடன் முதல்வர் நேற்று உள்ளி ஊராட்சியில் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது இதில் மேற்கண்ட ஊராட்சியை சேர்ந்த மக்கள் கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கை மனுக்களை வழங்கினர் மனுக்கள் பெறப்பட்டது இதில் குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமுலு விஜியன் ஒன்றிய குழு தலைவர் என்.இ.சத்தியாந்தம் வருவாய் கோட்டாட்சியர் சுபலட்சுமி பொது மக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டனர் அப்போது உடன் இருந்த தாசில்தார் சித்ராதேவி  வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வினோத் நந்தகுமார் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சாந்தி மீனா மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் ஆனந்தி முருகானந்தம் ஒன்றிய குழு உறுப்பினர்கள் ரஞ்சித் குமார். கலைச்செல்வி தேவராஜ். பிரியா சக்திவேல். உஷாராணி தமிழரசன்.
ஒன்றிய செயலாளர்  அ.அன்பரசன்  மற்றும் உள்ளி ஊராட்சி தலைவர் வி.ஜெய்சங்கர். சின்ன தோட்டாலம் ஊராட்சி தலைவர் மேரி வீப்பன்ராஜ். கீழ் பட்டி ஊராட்சி தலைவர் லோகேஸ்வரி . செம்பேடு ஊராட்சி தலைவர் யுவராணி சத்தியமூர்த்தி. கருணிகிசமுத்திரம் ஊராட்சி தலைவர் சுதாகர். அலங்காநல்லூர் ஊராட்சி தலைவர் செண்பகவல்லி. வளத்தூர் ஊராட்சி தலைவர் நிர்மலா சேட்டு. குளிதிகை ஊராட்சி தலைவர் சுமித்ரா பாபு. மற்றும் ஊராட்சி துணைத் தலைவர்கள் வார்டு உறுப்பினர்கள் உட்பட பல்வேறு துறை அலுவலர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.


குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன் 

No comments:

Post a Comment

Post Top Ad