குடியாத்தம் ஜூலை 30
வேலூர் மாவட்டம் குடியாத்தம் 35 வது வார்டு ராஜ கணபதி நகர் திருமலை கார்டன் ஜெ ஜெ நகர் ஆகிய குடியிருப்பு பகுதியில் புதியதாக மது கடை திறப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
இப்பகுதியில் பள்ளிகள் மருத்துவமனை ரோட்டரி கிளப் லைன்ஸ் கிளப் நகராட்சி துவக்குப்பள்ளி உள்ளதால் அப்பகுதியில் தினசரி பள்ளி மாணவ மாணவிகளின் போக்குவரத்தை அதிகமாக உள்ளது
குடியிருப்பு பகுதியில் மது கடை திறப்பதால் பொதுமக்களுக்கு அதிக அளவில் இடையூறு ஏற்படும் என்ற வகையில் அப்பகுதி பொதுமக்கள் தினசரி மறியலில் ஈடுபட்டு வருகிறார்கள் இது சம்பந்தமாக இன்று காலை அப்பகுதி பொதுமக்கள் குடியாத்தம் நகர காவல் நிலையத்தில் 35 வது வாா்டு நகர மன்ற கன்னிகா பரமேஸ்வரி தலைமையில் புகாா் மனு நகர காவல் ஆய்வாளாா் பாா்த்த சாரதி இடம் கொடுத்தனா் . உடன் நகரமன்ற உறுப்பினா் த புவியரசி மு நகர மன்ற உறுப்பினா்கள்
வி இ கருணா ஆறுமுகம் மற்றும் ஊர் பொதுமக்கள் உடன் இருந்தனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment