காட்பாடி ஆக. 26-
வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த காங்கேயநல்லூரில் கிருபானந்த வாரியார் சித்தி வளாகம் உள்ளது. கிருபானந்த வாரியாரின் 119வது பிறந்தநாள் விழா மாவட்ட ஆட்சியர் தலைமையில் சிறப்பாக கொண்டாடப்பட்டது .
கிருபானந்தா வாரியாரின் 119 ஆவது பிறந்தநாள் விழாவை காங்கேயநல்லூரில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன், வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா, துணை மேயர் சுனில் குமார், 1வது மண்டல குழு தலைவர் புஷ்பலதா வன்னியராஜா மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
No comments:
Post a Comment