குடியாத்தம் ஆக 11
வேலூர் மாவட்டம் குடியாத்தம் டவுன்
இன்ஸ்பெக்டர் பார்த்த சாரதி தலைமையிலான போலீசார் சித்துார் கேட் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடு பட்டனர். அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேரை தடுத்து நிறுத்தி ஆவணங்களை கேட்டுள்ளனர். அதற்கு அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகமடைந்த போலீசார், அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர் பிச்சனூர் பகுதியை சேர்ந்த சிவப்பிரகாசம் மகன் சந்தோஷ்குமார் (வயது 28) , லிங்குன்றம் கணபதி நகரை சேர்ந்த கிருஷ்ணன் மகன் நேதாஜி (வயது 35) என்பதும், அவர் ஓட்டி வந்தது திருட்டு வாகனம் என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து அந்த வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார் அவரிடம் மேற்கொண்டு தீவிர விசாரணை செய்தனர். அதில் வீட்டில் மறைத்து வைத்திருந்த மேலும் 3 பைக்கு களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து சந்தோஷ் குமார் நேதாஜி ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment