நேற்று நடைபெற்ற சோதனையில் 20 கிலோ குட்கா கடையில் வைத்திருந்த கடைக்காரர் அதிரடி கைது! - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday 17 August 2024

நேற்று நடைபெற்ற சோதனையில் 20 கிலோ குட்கா கடையில் வைத்திருந்த கடைக்காரர் அதிரடி கைது!

காட்பாடி ஆக17

வேலூர் மாவட்டம் காட்பாடியில் குட்கா விற்ற கடைக்காரர் கைது 20 கிலோ பறிமுதல் செய்யப்பட்டு கடைக்கு சீல்  

காட்பாடி இன்ஸ்பெக்டர் ஆனந்தன் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் செந்தில்குமார் உணவு பாதுகாப்பு அலுவலர் ராஜேஷ் ஆகியோர் கொண்ட குழுவினர் காட்பாடி பகுதியில் உள்ள கடைகளில் நேற்று சோதனை நடத்தினர் இதில் மாநகராட்சி ஒன்றாவது மண்டல அலுவலகம் எதிரே உள்ள கடையில் சோதனை செய்த பொழுது கடையில் தடை செய்யப்பட்ட குட்கா  20 கிலோ விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது.

 இதனை அடுத்து குட்காவை பறிமுதல் செய்து கடைக்கு சீல் வைத்தனர் இதுகுறித்து காட்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து கடைக்காரர் அன்பு வை கைது செய்தனர் தொடர்ந்து அவரது வங்கி கணக்கு முடக்கப்பட்டது இந்தவழக்கில் அவரது செல்போன் என்னும் ஆய்வு செய்யப்பட்டு வருவதாக காட்பாடி போலீசார் தெரிவித்தனர்.


காட்பாடி தாலுகா செய்தியாளர் கே எஸ் அருண் 

No comments:

Post a Comment

Post Top Ad