ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு கூட்டம் - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday 17 August 2024

ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு கூட்டம்

காட்பாடி ஆக17

வேலூர் மாவட்டம்  காட்பாடி காந்திநகர் கிழக்கில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி வளாகத்தில் பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு கூட்டம் இன்று நடைபெற்றது.

  நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆர்.இந்திரா தலைமை தாங்கினார். வேலூர் மாநகராட்சியின் மாமன்ற உறுப்பினர் பி.சிவசங்கரி கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார். முன்னதாக பள்ளி உதவி ஆசிரியை டி.தேவி வரவேற்றுப் பேசினார். 
மறு கட்டமைப்பின் பார்வையாளராக தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் செயலாளர் முனைவர் செ.நா.ஜனார்த்தனன் பங்கேற்றார் இந்த நிகழ்வில் பள்ளி மேலாண்மை குழுவிற்கு புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தலைவராக எஸ்.சாவித்திரி துணைத்தலைவராக ஜே.புவனேஸ்வரி மாமன்ற உறுப்பினராக பி.சிவசங்கரி இல்லம் தேடி கல்வி திட்ட உறுப்பினராக எஸ்.அஜய்குமாரி முன்னாள் மாணவர் உறுப்பினராக பி.டெய்சி பி.பிரியா எஸ்.ஆதிலட்சுமி உள்பட 24 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
 
தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். மறுக்கட்டமைப்பு நிகழ்வு ஜனநாயக பூர்வமாக நடத்தப்பட்டது பெற்றோர்கள் தங்கள் வருகையை பதிவு செய்தனர் உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து குழுவாக புகைப்படம் எடுத்துக் கொண்டனர் உறுப்பினர்கள் 24 பேரும் இணைந்து தலைவரையும் துணைத் தலைவரையும் தேர்ந்தெடுத்தனர்.

வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் 

No comments:

Post a Comment

Post Top Ad