அமைப்புசாரா நலவாரிய உறுப்பினர் ஆர்.டி.பழனி (ஆர்.டி.பி) தலைமையில் 6 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம்! - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday 1 August 2024

அமைப்புசாரா நலவாரிய உறுப்பினர் ஆர்.டி.பழனி (ஆர்.டி.பி) தலைமையில் 6 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம்!

வேலூர் ஆகஸ்ட் 01

வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியில் அமைப்புசாரா நலவாரிய உறுப்பினர் ஆர்.டி.பழனி (ஆர்.டி.பி) தலைமையில் 6 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வேலூர் மாவட்டம், சத்துவாச்சாரி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் அகில இந்திய கட்டுமான அமைப்புசாரா தொழிற்சங்கம் சார்பில் கூட்டமைப்பு நலவாரிய உறுப்பினரும், தமிழ்நாடு அமைப்புசாரா ஆட்டோ ஓட்டுநர்கள் நல வாரியத்தின் நிறுவனத் தலைவரும், தொழிற்சங்க போராளியும், தொழிலதிபருமான ஆர்.டி.பழனி (RTP) துவக்கி வைத்து வாழ்த்துரை வழங்கினார்.

ஆறு அம்ச கோரிக்கைகளை முன்வைத்து கட்டுமான தொழிலாளர்கள் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்காக அயராது பாடுபட வேண்டும் அவர்களுக்கு தேவையானதை பூர்த்தி செய்ய வேண்டும் என்ற நோக்கில், அகில இந்திய கட்டுமான அமைப்பு சாரா தொழிற்சங்கங்களில் கூட்டமைப்பு வேலூர் மாவட்டத்தின் சார்பாக கூட்டமைப்பு தலைவர் கே.பி.பாஸ்கரன், கௌரவத் தலைவர் பி.என்.வெங்கடேசன் தலைமையிலும், கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ஜி.எம்.உமாசங்கர் வரவேற்புரையாற்றுகையில் இந்த ஆறு அம்ச கோரிக்கைகளை முன்வைத்து அமைப்புசாரா கொடிகள், பதாகைகளை கையில் ஏந்தி பேனர்களை பிடித்து சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோருடன் ஆட்சியர் அலுவலகம் எதிரில் கோஷங்களை எழுப்பி 6அம்ச கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டம் அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் பொன் வடிவேலு, வேல்முருகன், விஜயா, மணிமேகலை, தனபால், தாமோதரன், மணி, விஜயகுமார், சக்திவேல் சரவணன் முன்னிலையிலும், அமைப்புசாரா கூட்டமைப்பு நிர்வாகிகள் உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் வேலூர் மாவட்ட கூட்டமைப்பு செயலாளர் பி.சரவணன் நன்றியுரையாற்றி இந்த ஆர்ப்பாட்டம் நிறைவுபெற்றது.


வேலூர் தாலுகா செய்தியாளர் இன்பராஜ் 

No comments:

Post a Comment

Post Top Ad