காட்பாடி ஆக.7
வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா, தாராபடவேடு, சித்தூர் பேருந்து நிலையத்தில் காட்பாடி தெற்கு பகுதி திமுக சார்பில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 6ம் ஆண்டு நினைவு அஞ்சலி நிகழ்ச்சி
காட்பாடி தெற்கு பகுதி திமுக செயலாளரும், வேலூர் மாநகராட்சி துணை மேயருமான மா.சுனில்குமார் தலைமையில் நினைவஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு தெற்கு பகுதி திமுக செயலாளரும், துணை மேயருமான மா.சுனில்குமார் ஏற்பாட்டில் அண்ணா திருவுருவச் சிலை பகுதியை மலர்களால் அலங்கரித்து முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தனர். இந்த நினைவஞ்சலி நிகழ்ச்சியில் துரைசிங்காரம், மாவட்ட பொருளாளர் நரசிம்மன், பொதுக்குழு உறுப்பினர் தயாநிதி, வடக்கு பகுதி செயலாளர் வன்னியராஜா, மண்டல குழு தலைவர் புஷ்பலதா வன்னியராஜா, மாநகராட்சி கவுன்சிலர்கள் கே. அன்பு, உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்ற ஒருங்கிணைந்த மாவட்ட தலைவர் டீட்டா சரவணன், ரஜினி, வட்ட செயலாளர்கள் சசிகுமார், விநாயகம் இளங்கோ, சம்பந்தம், பகுதி நிர்வாகிகள் கே.ஏ.கண்ணன், கே.எஸ்.கண்ணன், அமைப்புசாரா ஓட்டுனர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் டீக்காராமன் மற்றும் திரளான திமுக நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்று மலர்த்துவி மரியாதை செய்து அஞ்சலி செலுத்தினர்.
காட்பாடி தாலுகா செய்தியாளர் கே எஸ் அருண்
No comments:
Post a Comment