காட்பாடி ஆக15-
வேலூர் மாவட்டம் காட்பாடி வட்டம் வன்றந்தாங்கள் கிராமத்தில் 78 வது சுதந்திர தின விழா முன்னாள் முப்படை வீரர்கள் மற்றும் வீர மங்கையர் அமைப்பின் சார்பில்
தேசியக் கொடி ஏற்றி இனிப்பு வழங்கி மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு அப்பகுதியின் தலைவர் சதிஸ் அவர்கள் தலைமை தாங்கினார்,கமலநாதன் அவர்கள் வரவேற்றார், கிருஷ்ணமூர்த்தி அவர்கள் முன்னிலை வகித்தார்.
இந் நிகழ்ச்சியில் வேலூர் மாவட்டம் ECHS அதிகாரி லெப்டன் கர்னல் சுந்தரம் சிறப்பு அழைப்பாளர்கள் கலந்து கொண்டு தேசியக் கொடி ஏற்றி வீரவணக்கம் செலுத்தினார்.
வேலூர் மாவட்ட ITVVO தலைவர் ஜெயக்குமார் அவர்கள் மாநில துணைத்தலைவர் சிவகுமார் அவர்கள், மாவட்ட செயலாளர் முருகேசன் மாவட்ட பொருளாளர் ஓம் பிரகாஷ் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் GR, கிருஷ்ணமூர்த்தி குடியாத்தம் வட்டத் தலைவர் சிவ D ஜெயக்குமார் செயலாளர் வெங்கடேசன் பொருளாளர் குணசேகரன் கே.வி.குப்பம் வட்டம் தலைவர் நாகராஜ் கலந்து கொண்டனர்,
முன்னாள் ராணுவ வீரர்கள், வீரமங்கையர்கள், கலந்து கொண்டனர் இந் நிகழ்ச்சியில் நாடு சுதந்திரம் பெற உயிரிழந்த தியாகிகளுக்கும் அண்மையில் எல்லையில் நமது தாய் நாட்டிற்க்காக உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்களின் ஆத்மா சாந்தியடையவும் இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
No comments:
Post a Comment