பேரணாம்பட்டு ஆக15-
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றிய பத்தலப்பல்லி கிராமத்தில் 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி தலைமையில் நடைப்பெற்றது.
கிராம சபை கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக
வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர், கழக அமைப்புசாரா ஓட்டுநர் அணி தலைவர் D.M.கதிர் ஆனந்த்MP அவர்கள் கலந்துக்கொண்டு பொதுமக்களிடையே குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றுக்கொண்டு மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். உடன் குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமுலு அவர்கள் ஒன்றியக்குழு தலைவர் சித்ரா ஜனார்த்தனன்,
ஒன்றிய கழக செயலாளர்கள் ஜனார்த்தனன், டேவிட், கள்ளூர் ரவி,
நகர கழக செயலாளர் சுபேர் அகமத், நகர மன்ற உறுப்பினர்கள், ஊரக ஊராட்சிமன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் பலர் கலந்துக்கொண்டனர்.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
No comments:
Post a Comment