வேலூர் ஆக15-
வேலூர் மாவட்டம் பள்ளிக்கல்வித்துறையின் தனியார் பள்ளிகளின் மாவட்டக்கல்வி அலுவலர் அலுவலகத்தில் இன்று 78வது சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
சுதந்திர தின விழா நிகழ்ச்சிக்கு மாவட்டக்கல்வி அலுவலர் (பொ) கோ.பழனி தலைமை தாங்கினார். கழிஞ்சூர் பேரூராட்சியின் முன்னாள் தலைவர் சி.நரசிம்மன் தேசிய கொடியினை ஏற்றி வைத்தார்.
அலுவலகத்தின் கண்காணிப்பாளர் செந்தில், ஜுனியர் ரெட்கிராஸ் மாவட்ட அமைப்பாளர் செ.நா.ஜனார்த்தனன் முன்னிலை வகித்தார். மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு தேசிய கொடி ஏற்றி அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
No comments:
Post a Comment