காட்பாடி ஆக15-
வேலூர் மாவட்டம் காட்பாடி ரெட்கிராஸ் அலுவலகத்திலும் காந்திநகர் கிளை நூலகத்திலும் நடைபெற்ற 78வது இந்திய சுதந்திர தின விழாவிற்கு அவைத்தலைவர் முனைவர்.செ.நா.ஜனார்த்தனன் தலைமை தாங்கினார். மாவட்ட காவல்துறை போக்குவரத்து விழிப்புணர்வு குழுவின் செயலாளர் மற்றும் மருத்துவர் சங்க செயலாளர் டாக்டர் அ.மு.இக்ராம், அவை துணைத்தலைவர்கள் ஆர்.சீனிவசான், ஆர்.விஜயகுமாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
துணை முதன்மை போக்குவரத்து காப்பாளர் எஸ்.ரமேஷ்குமார் ஜெயின் செயலாளர் எஸ்.எஸ்.சிவவடிவு பொருளாளர் வி.பழனி ஆகியோர் வாழ்த்தி பேசினர். மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் டாக்டர் வீ.தீனபந்து, உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
விழாவில் சிறப்பாக பணி செய்த வேலூர் மாநகராட்சியின் தூய்மை பணியாளர்களக்கு கதராடை அணிவித்து பாராட்டப்பட்டனர். முன்னதாக நல்நூலகர் தி.மஞ்சுளா வரவேற்றார். நூலகர் சத்யவாணி நன்றி கூறினார்.
காட்பாடி தாலுகா செய்தியாளர் இன்பராஜ்
No comments:
Post a Comment