வேலூர் ஆக 15
வேலூர் மாவட்டம் காட்பாடி தமிழ்நாடு அறிவியல் இயக்க வேலூர் மாவட்டத்தின் சார்பில் 78வது சுதந்திர தின விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்பதற்காகவே நமது தலைவர்கள் என்ற தலைப்பில் தொகுக்கப்பட்ட புத்தகமும், மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், சுப்பிரமணிய பாரதி, வ.உ.சிதம்பரனார், ராணி வேலு நாச்சியார், ஆகிய 6 தேசிய தலைவர்களின் முகமூடி அணிந்து 78வது சுதந்திர தின விழாவின் நிகழ்ச்சி நடைபெற்றது.
காட்பாடி காந்திநகரில் உள்ள துளிர் பள்ளியில் நடைபெற்றது. நிகழ்விற்கு பள்ளியின் தலைமையாசிரியை த.கனகா தலைமை தாங்கினார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்ட தலைவர் பேராசிரியர் பே.அமுதா தேசிய கொடியினை ஏற்றிவைத்து தேச தலைவர்களின் முகமூடிகளை மாணவர்களுக்கு வழங்கினார். மாவட்ட செயலாளர் செ.நா.ஜனார்த்தனன் சுதந்திர தினத்தினை முன்னிட்டு தேசிய தலைவர்கள் என்ற புத்தகத்தினை அறிமுகம் செய்து பேசினார்.
ஓய்வு பெற்ற மாவட்ட கருவூல அலுவலர் அறிவியல் இயக்க வேலூர் கிளை செயலாளர் முத்து.சிலுப்பன், காட்பாடி ரெட்கிராஸ் மேலாண்மைக்குழு உறுப்பினர் லிவிங்ஸ்டன் மோசஸ் ஆகியோர் வாழ்த்தி பேசினர். பள்ளியின் முன்னாள் தாளாளர் வி.பழனி வரவேற்று பேசினார். மாணவ மாணவிகளின் கலை நிகழ்சிகள் நடைபெற்றன. அனைவருக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
No comments:
Post a Comment