வீடு வாங்கி தருவதாக கூறி கூலி தொழிலாளிடம் 8 லட்சம் மோசடி அவரிடம் இருந்து பணத்தை மீட்டு தர கோரி எஸ் பி அலுவலகத்தில் மனு! - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday 21 August 2024

வீடு வாங்கி தருவதாக கூறி கூலி தொழிலாளிடம் 8 லட்சம் மோசடி அவரிடம் இருந்து பணத்தை மீட்டு தர கோரி எஸ் பி அலுவலகத்தில் மனு!

காட்பாடி ஆக21

வேலூர் மாவட்டம் எஸ்பி அலுவலகத்தில் இன்று வாராந்திர மக்கள் குறைதீர்வு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு ஏ. டி. எஸ்பி கோடீஸ்வரன் தலைமை தாங்கினார். இதில் ஏராளமான பொதுமக்கள் தங்களது புகார் மனுக்களை அளித்தனர்.

காட்பாடி செங்குட்டை பகுதியைச் சேர்ந்த ஒருவர் அளித்துள்ள மனுவில், " எனக்கு திருமணம் ஆகி 2 பிள்ளைகள் உள்ளனர். நான் பார்சல் சேவை நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறேன். எனக்கு எங்கள் பகுதியில் ஒரு நபர் அறிமுகமானார். அவர் எனக்கு ரூ. 35 லட்சம் மதிப்புள்ள சொத்தை விற்பதாக கூறினார். அதன் பின்னர் எனக்கு அந்த வீட்டை சுத்தி காட்டினார். அதில் ஏற்கனவே ஒரு குடும்பம் தங்கி இருப்பது எனக்கு தெரிய வந்தது.

இது குறித்து அவரிடம் கேட்டபோதுவிரைவில் அவர்கள் காலி செய்து விடுவார்கள் என கூறினார். இதனை நம்பி நானும் அவருக்கு 3 தவணைகளாக ரூ. 8 லட்சம் கொடுத்தேன். ஆனால் அவர் இதுவரை வீட்டை கிரயம் செய்து தரவில்லை. காலதாமதம் செய்து வருகிறார். அவரிடம் இருந்து எனது பணத்தை மீட்டு அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

காட்பாடி தாலுகா செய்தியாளர் கே எஸ் அருண் 

No comments:

Post a Comment

Post Top Ad