குடியாத்தம் ஆக 21
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள தனியார் மருத்துவமனை உள்ளது அநத மருத்துவமனையில் டாக்டராக பணிபுரிபவர்கள் ஜெகன் (வயது 25) மெய்யன்பு (வயது 28) இவர்கள் இருவரும் நேற்று இரவு குடியாத்தம் பகுதியில் இருந்து காக்கா தோப்பு நோக்கி சென்று கொண்டிருந்தார் அப்போது கார்த்திகா புரத்தில் இருந்து தேங்காய் நார்ளோடு ஏற்றிக்கொண்டு சித்தூர் கேட் நோக்கி வந்து கொண்டிருந்த நான்கு சக்கர வாகனம் டூவீலர் மீது மோதியது.
இதில் டூவீலரில் வந்த ஜெகன் மெய் அன்பு ஆகிய இருவருக்கும் கை கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது இது அடுத்து அங்கிருந்தவர்கள் இருவரையும் மீட்டு குடியாத்தம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் அங்கு முதல் உதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment