வேலூர் ஆக 14
வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட
சீவூர் ஊராட்சி ஆகிய ஊராட்சிக்கு உட்பட்ட மக்களுடன் முதல்வர் சிறப்பு திட்ட முகாம் சீவூர் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடந்தது ஒன்றிய குழு தலைவர் சத்யானந்தம்
ஒன்றிய செயலாளர் ரவி தலைமை வகித்தார் மாவட்ட ஒன்றிய குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி ஒன்றிய குழு உறுப்பினர்கள் அமுதா லிங்கம் தீபிகா பரத் குடியாத்தம் தாசில்தார் சித்ராதேவி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நந்தகுமார் வினோத்குமார் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சாந்தி மீனா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக சப் கலெக்டர் சுபலட்சுமி குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமுலு விஜயன் கலந்து கொண்டு மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றனர் பெறப்பட்ட சில மனுக்களுக்கு அங்கேயே உடனடியாக தீர்வு காணப்பட்டது முகாமில் வருவாய் காவல்துறையினர் மின்சாரம் சமூக நலன் சுகாதாரம் உள்ளிட்ட 15 துறைகளை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டு மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் ஆன்லைனில் பதிவு செய்தனர் இதில் வருவாய் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர் நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்த சீவூர் ஊராட்சி மன்ற தலைவர் உமாபதி துணை தலைவர் அஜித் ஆகியோர் செய்திருந்தனர் முகாமில் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் பற்குணம் நேரு மற்றும் கிழக்கு வருவாய் ஆய்வாளர் பலராமா பாஸ்கர் கிராம நிர்வாக அலுவலர் ரகு மற்றும் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் முகாமில் கலந்து கொண்டனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment