காட்பாடி ஆக.12
வேலூர் மாவட்டம் காட்பாடி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலம் பல்வேறு பணிகள் இதில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் வேலூர் மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகின்றன
இதில் ஒப்பந்ததாரர்கள் செய்யும் பணிகள் அனைத்தும் தரமற்றதாகவும் பொதுமக்கள் பல்வேறு இடங்களில் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்த சூழ்நிலையில் வேலூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக கன மழை கொட்டி தீர்த்து வந்தது இதனை அடுத்து காட்பாடி அடுத்த திருவள்ளுவர் நகர் செல்லும் சாலையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பாதாள சாக்கடை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன அவர்கள் பணி செய்த இடத்தில் சாலைகளில் திடீரென பள்ளம் விழுந்துள்ளது இதனால் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் வயதானவர்கள் கர்ப்பிணிகள் என அனைவரும் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்
பெரும் பெரும் அசம்பாவிதங்கள் பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதற்கு முன் உடனடியாக மாநகராட்சி அதிகாரிகள் இது குறித்து நடவடிக்கை எடுக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுகின்றனர்.
வேலூர் தாலுகா செய்தியாளர் இன்பராஜ்
No comments:
Post a Comment