அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திலிருந்து விலகி
அதிமுகவில் இணைந்தனர்
குடியாத்தம் ஆக 29
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திலிருந்து விலகி அதிமுகத்தில் இன்று
வியாழக்கிழமை காலை 10 மணி அளவில் நெல்லூர் பேட்டை சிவகாம சுந்தரி திருமண மண்டபத்தில் குடியாத்தம் நகர அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை சார்ந்த நிர்வாகிகள் கழகத்தில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு வேலூர் புறநகர் மாவட்ட கழக செயலாளர் முன்னாள் ஆவின் பெருந்தலைவர் த.வேலழகன் அவர்கள் தலைமை தாங்கினார். நகர கழக செயலாளர் J.K.N.பழனி அவர்கள் வரவேற்றார். மாவட்ட கழக துணைச் செயலாளர்கள் கஸ்பா R.மூர்த்தி, S. அமுதா சிவப்பிரகாசம், மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர் டில்லி பாபு, கழக நிர்வாகிகள் புகழேந்தி, A.ரவிச்சந்திரன், M.பூங்கொடி மூர்த்தி, M.பாஸ்கர், K.அமுதா கருணா, S.N.சுந்தரேசன், R.K.மகாலிங்கம், G.தேவராஜ், M.K.சலீம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கழக அமைப்பு செயலாளர் முன்னாள் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் V.ராமு அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். திருப்பத்தூர் மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் K.C.வீரமணி அவர்களின் முன்னிலையில் குடியாத்தம் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் மாநில எம்.ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் முன்னாள் நகர மன்ற உறுப்பினர் நித்தியானந்தம், ஹரி கிருஷ்ணன், குமார் மற்றும் நிர்வாகிகள் அக்கட்சியில் இருந்து விலகி மீண்டும் தங்களை தாய் கழகத்தில் இணைத்துக் கொண்டனர். நிகழ்ச்சியில் நகர மன்ற உறுப்பினர்கள் K.லாவண்யா குமரன், A.தண்டபாணி, வார்டு கழக செயலாளர்கள் Y.வாசுதேவன், R.மாதவன், L.A.அன்பழகன் மற்றும் கழக நிர்வாகிகள் சார்பணி நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment