வேலூர் ஆக 22
வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஸ்ரீ
ராகவேந்திர சுவாமியின் ஆராதனை விழா முன்னிட்டு இலவச கண் மற்றும் பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.
ஸ்ரீ ராகவேந்திர சுவாமி ஆலய நிர்வாக கமிட்டி குடியாத்தம் கோல்டன் கேலக்ஸி ரோட்டரி சங்கம் மற்றும் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை துளசி பார்மா இணைந்து நடத்தும் இலவச கண் மற்றும் பொது மருத்துவ முகாம் கோல்டன் கேலக்ஸி ரோட்டரி சங்க தலைவர் அருள் பாலாஜி தலைமை தாங்கினார் ரோட்டரி சங்க செயலாளர் அருள் பொருளாளர் ரோட்டரி சங்க கோபிநாத் முன்னிலை வகித்தனர் மற்றும் நிகழ்ச்சியில் ரோட்டரி சங்க முரளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 250க்கு மேற்பட்ட பொதுமக்கள் முகாமில் கண் பரிசோதனை பொது மருத்துவ மருத்துவரிடம் ஆலோசனை பெற்றனர் அதேபோல் 353 வது ஸ்ரீ ராகவேந்திர சுவாமி ஆராதனை முன்னிட்டு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது விழாவில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment