குடியாத்தம் ஆக 24
வேலூர் மாவட்டம் குடியாத்தம் வரும் 7: 9:2024 அன்று நடைபெற இருக்கும் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு ஆலோசனைக் கூட்டம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று காலை நடைபெற்றது
கூட்டத்திற்கு வருவாய் கோட்டாட்சியர் செல்வி சுபலட்சுமி அவர்கள் தலைமை தாங்கினார் இக்கூட்டத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பாதுகாப்பு அம்சங்களை குறித்து விழாவில் பங்கேற்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டது
வேதியப் பொருள்களால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை பயன்படுத்தக் கூடாது எனவும் விநாயகர் சிலை வைக்கும் இடத்திற்கு முறையான அனுமதி பெற்று இருக்க வேண்டும் பொது அமைதிக்கு எவ்வித பாதிப்பு ஏற்படாத வண்ணம் விழா ஏற்பாடு உறுதி செய்தல் சட்டம் ஒழுங்கு பாதுகாத்தல் கூட்டத்தில் வலியுறுத்தி பேசப்பட்டது
இந்நிகழ்ச்சியில் வட்டாட்சியர் சித்ராதேவி நகர காவல் ஆய்வாளர் பார்த்தசாரதி நகராட்சி ஆணையாளர் மங்கையர்கரசன் உள்ளிட்ட வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மின்சார வாரிய அலுவலர்கள் தீயணைப்பு துறையினர் சுகாதாரத்துறையினர் விழா குழுவினர்கள் ஆகியோர் பங்கேற்றனர்
குடியரசு தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment