சாலை அமைக்க கோரி காட்பாடி அடுத்த வி.டி.கே. நகரில் சாலை மறியல்!
காட்பாடி ஆக 27
வேலூர் மாவட்டம் காட்பாடி வி டி கே நகரில் சாலை குண்டும்புழியமாக மற்றும் ஜல்லி மட்டும் போட்டு நீண்ட நாட்கள் ஆனதால் பொதுமக்கள் ஒன்றாக திரண்டு இன்று காலை சுமார் 10 மணியளவில் வி டி கே நகர் பொதுமக்கள் 50க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சுமார் 6 மாதங்களுக்கு மேலாக ஜல்லி மட்டும் கொட்டி விட்டு சாலை அமைக்காமல் விட்டிருந்தனர் மாநகராட்சி நிர்வாகத்தினர் மீது பொதுமக்கள் மிருந்த சிரமத்திற் குள்ளாகியிருந்தனர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் இன்று காலை சாலை மறியலில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து விடுதலைச் சிறுத்தைகள் மாநில துணை செயலாளர் வி.ச. ரகு அவர்கள் மாநகராட்சி உதவி ஆணையர் சந்திரசேகர் அவர்களை தொடர்பு கொண்டு கேட்டதில் திங்கட்கிழமை பணிகள் தொடங்குவதாக உறுதி அளித்துள்ளார். திமுக கவுன்சிலர்களுக்கு இடையே நடைபெறும் டெண்டர் ஒதுக்கீடு பிரிவினை பிரச்சனைகளினால் தான் பணிகள் சரிவர நடப்பதில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
வேலூர் தாலுகா செய்தியாளர் இன்பராஜ்
No comments:
Post a Comment