தமிழக மக்கள் ஜனநாயக கட்சி சார்பில் தமிழ் தேசிய கூட்டணி கட்சிகளுடன் முற்றுகை போராட்டம்! - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday 26 August 2024

தமிழக மக்கள் ஜனநாயக கட்சி சார்பில் தமிழ் தேசிய கூட்டணி கட்சிகளுடன் முற்றுகை போராட்டம்!

காட்பாடியில் தமிழக மக்கள் ஜனநாயக கட்சி சார்பில் தமிழ் தேசிய கூட்டணி கட்சிகளுடன் முற்றுகை போராட்டம்!

காட்பாடி ஆக 26 

வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா, விருதம்பட்டில் தமிழக மக்கள் ஜனநாயக கட்சி, டாக்டர் பழனி பாபா பேரவை மற்றும் டாக்டர் அம்பேத்கர் பேரவை சார்பாகவும் தமிழ் தேசிய கூட்டணி கட்சிகளுடன் இலங்கை ராணுவத்தால் நடத்தப்படும் தமிழக மீனவர் படுகொலைகளை கண்டித்தும், தமிழக மக்களை பொருளாதார ரீதியாக சுரண்டும் தம்ரோ பர்னிச்சரை இழுத்து மூடக்கோரியும் மாபெரும் முற்றுகைப் போராட்டம் தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சி வேலூர் மாவட்டத் தலைவர் கே.எம்.சரீப் தலைமையில் நடைபெற்றது.

 இந்த ஆர்ப்பாட்டத்தில் மே 17 இயக்கம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, விடுதலை தமிழ் புலிகள் கட்சி மாவட்ட தலைவர் குடந்தை அரசன் ஆகியோர் முன்னிலையிலும், தமஜக துணைத் தலைவர் அன்சர்மில்லத், துணைப் பொதுச் செயலாளர் சண்முகராஜா, மாநில செயலாளர் இர்ஷாத்அலி, மாநகர் மாவட்ட பொறுப்பாளர்கள் பிலால், சர்புதீன், ஜாபர்கான், அக்தர், சத்தார், புறநகர் மாவட்ட செயலாளர் நியாஸ் அகமது ஆகியோருடன் வேலூர் மாவட்ட தமிழக மக்கள் ஜனநாயக கட்சி ஏற்பாட்டில் இந்த மாபெரும் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. 

இப்போராட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக மாநில துணை செயலாளர் இஸ்லாமிய ஜனநாயக பேரவை ஜாபீர், வி.சி.க. வேலூர் மாவட்ட செயலாளர் வேலூர் பிலிப், ம.ஜ.க ஏஜாஸ், இயூமுலீக் சபீர்கான், ஐ.எம்.எம்.கே வேலூர் மாவட்ட தலைவர் ஷாஜஹான், தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேலூர் மாவட்ட தலைவர் முன்னா, சமூக ஆர்வலரும், தமிழ்நாடு மக்கள் உரிமை கட்சி மாவட்ட செயலாளரும், பத்திரிகை செய்தி உதவி ஆசிரியருமான டாக்டர்.ராஜ்பாபு, மனித உரிமை காப்பாளர், சமூக ஆர்வலர் உஷா, மே 17 இயக்கம், தோழர்.கௌரிசங்கர் ஆகிய தமிழ் தேசிய கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் செயலாளர்கள் பொறுப்பாளர்கள் நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டு கண்டன பேரரையாற்றி, கண்டன கோஷங்களை எழுப்பி முற்றுகையை போராட்டம் நடத்தினர் 

வேலூர் தாலுகா செய்தியாளர் இன்பராஜ் 

No comments:

Post a Comment

Post Top Ad