ஆர்யா வித்யாஷரம் சிபிஎஸ் இ பள்ளியில் மாணவர்களின் அசாத்திய திறன் ஊக்குவித்தல் நிகழ்ச்சி! - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday 17 August 2024

ஆர்யா வித்யாஷரம் சிபிஎஸ் இ பள்ளியில் மாணவர்களின் அசாத்திய திறன் ஊக்குவித்தல் நிகழ்ச்சி!

குடியாத்தம் ஆக 17 

குடியாத்தம் ஆர்யா வித்யாஷரம் சிபிஎஸ்இ    மேல்நிலைப் பள்ளியில் இன்று காலை 10 மணி அளவில் எல் கே ஜி முதல் இரண்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களிடையே திறமை வெளிகாட்டும் நிகழ்ச்சிக்கு பெற்றோர்கள் குத்து விளக்கு ஏற்றி விழாவினை தொடங்கி வைத்தனர் அனைத்து பெற்றோர்களும் முன்னிலையில் விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது

நிகழ்ச்சிக்கு ஆர்யா வித்யாஷரம் பள்ளியின் தலைவர் ஜி தண்டபாணி அவர்கள் தலைமை தாங்கினார் பள்ளியின் முதல்வர் நாகேந்திர ரெட்டி அவர்கள் சிறப்புரையாற்றினார் மேலும் பள்ளி துனை முதல்வா் க ஜெயலட்சுமி அவர்கள் வரவேற்புரையாற்றினாா் பள்ளிசெயலாளாா் சந்திரசேகர் பொருளாளர் ஸ்ரீதர் மற்றும் பள்ளியின் அறங்காவலர்கள் அனைவரும் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார்கள்

விழாவில் எல்கேஜி முதல் இரண்டாம் வகுப்பு வரைவிலான மாணவர்களின் ஆடல், பாடல் திருக்குறள் ஒப்பிவித்தல் நெகிழி விழிப்புணர்வு நாடகம் மாறுவேடம் மற்றும் யோகா போன்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது அனைத்து மாணவர்களும் கலந்து கொண்டு பார்வையாளர்களின் கண்களுக்கு விருந்தளித்தனர்

விழாவில் பள்ளி அறக்கட்டளை உறுப்பினர்கள் ஆசிரியர்கள் பெற்றோர்கள் மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

இறுதியாக ஆர்யா பள்ளி ஆசிரியர் திருமதி ந ச தேவிப்பிரியா நன்றி உரையாற்றினார் நாட்டுப்பண்ணுடன் விழா இனிதே முடிவடைந்தது

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன் 

No comments:

Post a Comment

Post Top Ad