பார்வை இழப்பு தடுப்பு சங்கம் மற்றும் அகர்வால் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம்! - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday 15 August 2024

பார்வை இழப்பு தடுப்பு சங்கம் மற்றும் அகர்வால் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம்!

பேரணாம்பட்டுஆக.15-

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு
எஸ்.மனோரஞ்சிதம் சேரிடேபிள் & சோஷியல்
டிரஸ்ட் , ஈக்குவாடஸ் டெவலப்மெண்ட் 
இனிஷியேட்டிவ்ஸ் ட்ரஸ்ட் மற்றும் வேலூர்மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு
சங்கம் , சென்னை அகர்வால் கண் மருத்துவமனை & ஆராய்ச்சி மையம் இணைந்து இலவச கண் சிகிச்சை முகாம் மற்றும் இலவச விழிலென்ஸ் பொருத்தும் முகாம் நடைபெற்றது.

 சிவபிரியா மருத்துவமனையில் நடைப்பெற்ற இந்த முகாமிற்கு டாக்டர்.
 கே.சிவபிரியா தலைமை தாங்கினார். 
டாக்டர். எஸ்.சிவக்குமார் முன்னிலை வகித்தார். சென்னை டாக்டர். அகர்வால் மருத்துவமனையைச் சேர்ந்த குடியாத்தம் சே.சதீஷ்குமார் முகாமை தொடங்கி வைத்தார்.
இந்த முகாமில் 50க்கும்
மேற்பட்ட  பொதுமக்கள் கலந்துகொண்டு சிகிச்சை பெற்றனர்.
இதில் 15 நபருக்கு கண் அறுவை சிகிச்சைக்காக சென்னை அகர்வால்  கண் மருத்துவமனைக்கு‌ அனுப்பி வைக்கப்பட்டனர். 

முடிவில் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ரோட்டேரியன்
கே.ஜெயராஜ் நன்றி கூறினார்.


வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் 

No comments:

Post a Comment

Post Top Ad