மணல் ஏற்றி வந்த டிராக்டர் போலீசார் மடக்கி பிடித்து மணல் மற்றும் டிராக்டர் பறிமுதல்! - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday 5 August 2024

மணல் ஏற்றி வந்த டிராக்டர் போலீசார் மடக்கி பிடித்து மணல் மற்றும் டிராக்டர் பறிமுதல்!

குடியாத்தம் ஆக- 5

வேலூர் மாவட்டம் குடியாத்தம் கொண்ட சமுத்திரம் ஊராட்சி சாமியார் மலைப்பகுதியில் நகர போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த டிராக்டரை போலீசார் தடுத்து   நிறுத்தி சோதனை செய்ய முயன்ற போது டிரைவர் வண்டிய நிறுத்தி விட்டு தப்பி ஓடிவிட்டார்.

டிராக்டரில் சுமார்  1 யூனிட் மணல் கடத்தியது தெரிய வந்தது இதனால் போலீசார் வண்டியை பறிமுதல் செய்தனர் தப்பி ஓடிய டிரைவரை குறித்து போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன் 

No comments:

Post a Comment

Post Top Ad