மாற்றுத்திறனாளிகளுக்கு மளிகை மற்றும் நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்சி - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday 4 August 2024

மாற்றுத்திறனாளிகளுக்கு மளிகை மற்றும் நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்சி

 குடியாத்தம் ஆகஸ்ட்  4 

வேலூர் மாவட்டம் குடியாத்தம் மாற்றுத்திறனாளிகள் திருநங்கைகள் விதவைகளுக்கு கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து அரிசி பருப்பு, ரவை சேமியா போன்ற மளிகை மற்றும்  நிவாரண பொருட்கள்  வழங்கி வந்தோம் தற்போது 81 வது மாதமாக இன்று காலை நடு பேட்டை ராஜாஜி தெருவில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு செய்தியாளர் கேவி ராஜேந்திரன் தலைமை தாங்கினார்
தமிழக குரல் மாவட்ட செய்தியாளர் பாக்கியராஜ் கே வி குப்பம் செய்தியாளர் குபேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாற்றுத்திறனாளி சசிகலா வரவேற்புரை ஆற்றினார்.

சிறப்பு விருந்தினர்களாக குடியாத்தம் அரசினர் திருமகள் கலைக்கல்லூரி கணிதத் துறை தலைவர் டாக்டர் கருணாநிதி முன்னாள் நகர மன்ற உறுப்பினர் வி இ கருணா அரிமா சங்கத் தலைவர் ஜே பாபு
முன்னாள் நகர மன்ற துணைத் தலைவர் எஸ்டி மோகன்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்
இதில் மாற்றுத்திறனாளிகள் திருநங்கைகள் சலவை தொழிலாளர்கள் தூய்மை பணியாளர்கள் விதவைகள் என்று சுமார் 100 நபர்கள் கலந்து கொண்டனர் அனைவருக்கும் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியின் இறுதியில் பெருமாள் நன்றி கூறினார்

வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் 

No comments:

Post a Comment

Post Top Ad