சொத்து பிரச்சனை காரணமாக தம்பி கத்தியால் குத்தி கொலை- அண்ணன் கைது
குடியாத்தம் ஆக 25
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கீழ் செட்டிகுப்பம் பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் (வயது 44 ) இவரது தம்பி கவியரசன் (வயது 33 ) இவர்கள் இருவரும் கம்பி கட்டும் வேலை செய்து வந்தனர்
இருவருக்கும் திருமணமாகி செட்டிகுப்பம் பகுதியில் தனித்தனியாக வசித்து வருகின்றனர் இதனிடையே அண்ணன் கார்த்திகேயனுக்கும் தம்பி கவியரசனுக்கும் இடையே சொத்து பிரச்சனை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது
இந்நிலையில் நேற்று இரவு மீண்டும் சொத்துப் பிரச்சனை காரணமாக அண்ணன் கார்த்திகேயனுக்கும் தம்பி கவியரசனுக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது அப்பொழுது தகராறு முற்றியதில் இருவருக்கும் பைக்கலப்பு ஏற்பட்டுள்ளது இதில் ஆத்திரம் அடைந்த அண்ணன் கார்த்திகேயன் அருகில் இருந்த காய்கறிகளை வெட்டும் கத்தியால் தம்பி கவியரசனை சரமாரியாக குத்தியுள்ளார்
இதனையடுத்து ரத்த வெள்ளத்தில் சரிந்த கவியரசனை அங்கிருந்தவர்கள் மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்தனர் அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்
இதனையடுத்து உடல் கூறு ஆய்வுக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு உடல் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் கத்தியால் குத்திய அண்ணன் கார்த்திகேயனை போலீசார் கைது செய்து மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து குடியாத்தம் தாலுகா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் சொத்து பிரச்சனை காரணமாக தம்பியை அண்ணன் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment