உயிரிழந்த நபரின் குடும்பத்திற்கு மாநகர் மாவட்ட கழகச் செயலாளர் எஸ் ஆர் கே அப்பு ஆறுதல் தெரிவித்தார்
காட்பாடி ஆக 25
வேலூர் மாவட்டம் காட்பாடி தண்டல்கிருஷ்ணாபுரம் பாலாற்று குட்டையில் முள்ளிப்பாளையம் பகுதியை சேர்ந்த யுவராஜ் (வயது 21) என்பவர் குளித்துகொண்டு இருக்கும் போது குட்டை நீரில் மூழ்கி பலியானார்.
விடியா ஆட்சியில் பாலாற்றில் தடுப்பணை கட்டும் பணி நடைபெற்று பணி நிறைவடைந்து இருந்த நிலையில் தண்டல்கிருஷ்ணாபுரம் பாலாற்றில் இரவு நேரத்தில் மணல் கடத்தல் நடைபெறும்வதாகவும் அதில் ஏற்பட்ட பள்ளத்தில் மூழ்கி இளைஞர் உயிரிழந்ததாக கூறி அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். விருதம்பட்டு போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்
இந்நிலையில் அதிமுக வேலூர் மாநகர் மாவட்ட கழக செயலாளர் எஸ் ஆர் கே அப்பு உயிரிழந்த குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்து பாலாற்றில் மணல் கொள்ளை நடைபெற்று வருவதை தடுக்க வேண்டுமென வேலூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் போன் மூலம் தொடர்புகொண்டு பேசினார்.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
No comments:
Post a Comment