காட்பாடி ஆக23
வேலூர் மாவட்டம் காட்பாடி தாராபடவேடு பகுதியைச் சேர்ந்தவர் காமேஷ் (வயது 20). இவர் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர். காட்பாடி காவல் நிலைய பயிற்சி உதவி ஆய்வாளர் பரத் மற்றும் தலைமை காவலர் புகழேந்தி ஆகியோர் கஞ்சா வழக்கு தொடர்பாக கமேஷை நேற்று (22.08.2024) பிடித்து அழைத்து வந்து காவல் நிலையத்தில் கைவிலங்கிட்டு அமர வைத்திருந்தனர். காவல் நிலைய (பாரா) பாதுகாப்பு பணியில் காவலர் மணிகண்டன் இருந்துள்ளார்.
இதற்கிடையில், காவலர் மணிகண்டன் அசந்த நேரத்தில் கைவிலங்குடன் காமேஷ் தப்பி ஓடியுள்ளார். இதையடுத்து, காவல் நிலையத்தில் இருந்து கைவிலங்குடன் தப்பி ஓடிய காமேஷை பிடிக்க 2 தனிப்படைகள் அமைத்து தேடி வருகின்றனர். காவல் நிலையத்திற்க்கு அருகில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்துதேடிவருகின்றனர்.
காட்பாடி தாலுகா செய்தியாளர் கே எஸ் அருண்
No comments:
Post a Comment