குடியாத்தம் ஆக28
வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம்_வளத்தூர் உள் வட்டம்_ குளித்திகை கிராமத்தில் இன்று (28-08-2024 ) காலை 11:00 மணி அளவில் மதிப்பிற்குரிய வேலூர் மாவட்ட ஆட்சியர் சார்பாக நடைபெறும் சிறப்பு மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு திட்ட இயக்குனர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) அவர்கள் தலைமையேற்று _158 பயனாளிகளுக்கு 1 கோடியே 58 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்வில் பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா, உட்பிரிவு பட்டா மாறுதல் ஆணைகள், கலைஞரின் கனவு இல்ல பணி ஒதுக்கீட்டு ஆணை, கர்ப்பிணிகளுக்கு தாய் சேய் நல பெட்டகம், இலவச தையல் இயந்திரங்கள்,பண்ணை கருவிகள், மிளகாய் நாற்று மற்றும் மரக்கன்றுகள் ஆகியவை வழங்கப்பட்டன.
மேலும் இந்நிகழ்ச்சியில் மதிப்பிற்குரிய குடியாத்தம் வருவாய் கோட்ட அலுவலர் அவர்கள் பங்கேற்று, மேற்படி முகாமில் பெறப்பட்ட எஞ்சியுள்ள மனுக்கள் மீதுமீது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மேற்படி கூட்டத்தில் எடுத்துரைத்தார். மேலும் துறை சார்ந்த அலுவலர்கள் அவர்களது துறை மூலம் அரசால் செயல்படுத்தப்படும் நலத்திட்ட உதவிகள் குறித்து எடுத்துரைத்தனர். மேலும் இந்நிகழ்வில் மதிப்பிற்குரிய குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர், தனித்துணை ஆட்சியர் (SDC _SSS),மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர், திட்ட இயக்குனர் (தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்ககம்), வட்டாட்சியர், மண்டல துணை வட்டாட்சியர்,வட்டார வளர்ச்சி அலுவலர், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர், உதவி இயக்குனர் (வேளாண்மை), தோட்டக்கலை, சுகாதாரத்துறை , கால்நடை பராமரிப்பு துறை அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் கிராம உதவியாளர் ஆகியோர் பங்கேற்றனர.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment