வட்டாட்சியர் அலுவலகத்தில் விநாயகர் சதுர்த்தி திருவிழாவை முன்னிட்டு ஆலோசனைக் கூட்டம் - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday 27 August 2024

வட்டாட்சியர் அலுவலகத்தில் விநாயகர் சதுர்த்தி திருவிழாவை முன்னிட்டு ஆலோசனைக் கூட்டம்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆலோசனைக் கூட்டம்

குடியாத்தம் ஆக 27

வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வரும் 7:9 :2024 அன்று நடைபெற இருக்கும் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு ஆலோசனை கூட்டம் இன்று காலை வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது

கூட்டத்திற்கு வட்டாட்சியர் சித்ராதேவி தலைமை தாங்கினார்
தலைமையிடத்து துணை வட்டாட்சியர் உதயகுமார் முன்னிலை வகித்தார்
மண்டல துணை வட்டாட்சியர் சுபி சந்தர் வரவேற்றார் மேற்படி விழாவிற்கு செய்யப்பட வேண்டிய முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் பாதுகாப்பு அம்சங்கள் விழாவில் கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை குறித்து வட்ட அளவிலான கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது

இந்நிகழ்வில் வேதிய பொருட்களால் செய்யப்பட்ட விநாயகர் சிலையை பயன்படுத்தக் கூடாது எனவும்
விநாயகர் சிலைகளை வைக்க இடத்திற்கு முறையான அனுமதி பெறுதல் பொது அமைதிக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வண்ணம் விழா நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும்

சட்ட ஒழுங்கை பாதுகாத்தல் மற்றும் விநாயகர் விஜர்சன ஊர்வலத்தில் அமைதியான முறையில் நடத்த ஒத்துழைப்பு வழங்குதல் ஆகியவை குறித்து கூட்டத்தில் வலியுறுத்தி பேசப்பட்டது
இந்நிகழ்ச்சியில் வட்ட வழங்கல் அலுவலர் வெங்கடேசன்
மின்சார வாரியத் துறை இளநிலை பொறியாளர் உமா பிரியா
தீயணைப்புத் துறை மகேஷ் உதவி ஆய்வாளர்கள் பத்மநாபன் சந்திரசேகரன்
வருவாய் ஆய்வாளர்கள் பலராம பாஸ்கர் புகழ்லரசன்
நகர கிராம நிர்வாக அலுவலர் வெங்கடாஜலபதி சபரிமலை வட்டார வளர்ச்சி அலுவலர்
இந்து முன்னணி சேர்ந்த சாய் ஆனந்த் லோகேஷ் குமார் மாவட்டத் தலைவர் தரணி பிரபாகரன் மற்றும் விழா குழுவினர்கள் கலந்து கொண்டனர்.


குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன் 

No comments:

Post a Comment

Post Top Ad