குடியாத்தம் ராஜகோபால் பாலிடெக்னிக் கல்லூரியில் ரத்ததான சிறப்பு முகாம்! - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday 9 August 2024

குடியாத்தம் ராஜகோபால் பாலிடெக்னிக் கல்லூரியில் ரத்ததான சிறப்பு முகாம்!

குடியாத்தம் ஆக 9


வேலூர் மாவட்டம்  குடியாத்தம் ராஜகோபால் பாலிடெக்னிக் குடியாத்தம் நகர லயன்ஸ் கிளப் லியோகிளப் குடியாத்தம் அரசு தலைமை மருத்துவமனை கல்லப்பாடி ஆரம்ப சுகாதார நிலையம் இணைந்து சிறப்பும இரத்ததான முகாம் இன்று (9.8.2024) காலை நடைபெற்றது.

 இதில் பாலிடெக்னிக் மாணவர்கள் கலந்து கொண்டு ரத்ததானம் அளித்தனர் நிகழ்ச்சிக்கு பாலிடெக்னிக் முதல்வர் (பொறுப்பு) ஆர். ராஜாராம் தலைமை தாங்கினார் விரிவுரையாளர்  வி.தென்னரசு அனைவரையும் வரவேற்றார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு குடியாத்தம் அரசு தலைமை மருத்துவமனை அதிகாரி மாறன் பாபு  மருத்துவர் ஆக்னஸ்பியூலா முகாமை தொடங்கி வைத்தனர் லயன்ஸ் கிளப் மாவட்ட தலைவர்கள் எம்கே. பொன்னம்பலம் என். வெங்கடேஸ்வரன் எம்.கிரிதர் பிரசாத் மண்டல தலைவர் டீ. கமலஹாசன் குடியாத்தம் நகர லயன்ஸ் சங்க தலைவர் ஜே பாபு உறுப்பினர் டி.பிரவீன்குமார் உள்ளிட்டோர்  வாழ்த்துரை வழங்கினர் பாலிடெக்னிக் துறை தலைவர்கள் டி ராஜசேகரன் எம்பிஎஸ்.சரவணசெந்தில் எஸ்.கருணாநிதி பி.வினோத்குமார் டிஆர்.முத்துபவானி உள்ளிட்டோர் கலந்து கொண்டு முகாம் ஏற்பாடுகளை செய்தனர் இதில் 60 யூனிட்
ரத்தம் தானமாக மாணவர்களிடம் பெறப்பட்டது மருத்துவமனை ரத்த வங்கி டெக்னீஷியன்கள் சத்தீஸ்குமார் மோகன் பிரபு செவிலியர்கள் பிரேமா சத்தியா சுகாதார ஆய்வாளர் பிரகாசம் ஆகியோர்  கலந்து கொண்டனர் இறுதியில் விரிவுரையாளர் என் பிரசாந்த் நன்றி கூறினார்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன் 

No comments:

Post a Comment

Post Top Ad