குடியாத்தம் ஸ்ரீவிநாயகர் சதுர்த்தி விழாவைமுன்னிட்டு விழிப்புணர்வு கூட்டம் - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday 29 August 2024

குடியாத்தம் ஸ்ரீவிநாயகர் சதுர்த்தி விழாவைமுன்னிட்டு விழிப்புணர்வு கூட்டம்

குடியாத்தம் ஸ்ரீவிநாயகர் சதுர்த்தி விழாவைமுன்னிட்டு விழிப்புணர்வு கூட்டம்

குடியாத்தம் ஆக 29

வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஸ்ரீ விநாயகர் சதுர்த்தி விழாவை  முன்னிட்டு குடியாத்தம் காவல் நிலையத்தில் நகர காவல் ஆய்வாளர் பார்த்தசாரதி தலைமையில் கிராமிய காவல் ஆய்வாளர் சாந்தி முன்னிலையில்  ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றதுஇக் கூட்டத்தில் இந்து முன்னணி கட்சி மாவட்டத் தலைவர் தரணி பிஜேபி கட்சியில் மாவட்ட செயலாளர் லோகேஷ் குமார் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது  ஸ்ரீ விநாயகர் சிலை நகரம் மற்றும் கிராமிய பகுதி வீதிகளில் சிலை எங்கு வைத்தாலும் காவல்துறை அதிகாரிகளிடம் அனுமதி பெற்றுக்கொண்டு சிலை வைக்க வேண்டும்  அதேபோல் மூன்றாவது நாளில் ஸ்ரீவிநாயகர் சிலையை பிரச்சனைகள் எதுவும் வராமல் அமைதியான முறையில்  சிலையை கொண்டு செல்லவும் எனவும் ஆய்வாளர்கள் கூறினார்கள் அதைஏற்றுக் கொண்ட இந்து முன்னணி பொறுப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் அமைதியான முறையில் விநாயகர் சிலையை கொண்டு செல்வோம் என்று உறுதியளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன் 

No comments:

Post a Comment

Post Top Ad