குடியாத்தம் அருகே 10 சவர்ன் நகை திருட்டு இருவர் கைது
குடியாத்தம் செப்.9-
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த
வள்ளலார் நகர் பகுதியை சேர்ந்தவர் முருகன் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் இவர் குடும்பத்துடன் நேற்று இரவு வீட்டை பூட்டிக்கொண்டு உறவினரின் திருமண நிகழ்ச்சிக்கு சென்று உள்ளார் இரவு வீடு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டுக்குள் சென்று பார்த்தார் அப்போது உள்ளறையில் இருந்த பீரோ திறக்கப்பட்டு அதிலிருந்து பொருட்கள் சிதறி கிடந்தது மேலும் உள் அறையில் வைத்திருந்த 10 சவரன் தங்க நகை காணாமல் போனது தெரியவந்தது இது குறித்து முருகன் குடியாத்தம் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் நகர காவல் ஆய்வாளர் பார்த்தசாரதி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து விசாரணை நடத்தினர். கொள்ளை தொடர்பாக அசோக் நகர் பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் மகன் பிரசாந்த் (வயது19) கொண்ட சமுத்திரம் அம்பேத்கார் நகர் பகுதியை சேர்ந்த ஜோதி பிரகாசம் மகன் ஜோஸ் (வயது 20) ஆகியோரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment