தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் ஆசிரியர் தினவிழா - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday 9 September 2024

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் ஆசிரியர் தினவிழா

குடியாத்தம் செப் 9


வேலுர் மாவட்டம் குடியாத்தம் தமிழ்நாடு அறிவில் இயக்கம்  குடியேற்றம்  கிளை மற்றும் காமராஜர் தொண்டு மன்றம் சார்பில்  (08.09.2024) ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 5 மணி அளவில் குடியேற்றம்  காளியம்மன் பட்டி ராஜீவ் காந்தி நகரில் ஆசிரியர் தின விழா நடைபெற்றது.  குடியேற்றம்  கிளைத் தலைவர் கோ. தினகரன்  அவர்கள் விழாவிற்கு  தலைமையேற்றார் .
செயலாளர் ஆ.ச. மதன் அனைவரையும் வரவேற்றார்.
ஈ. பன்னீர்செல்வம் மற்றும் காமராஜர் தொண்டு மன்ற செயலாளர் ஜெ. தமிழ்ச்செல்வன்,வெ.ர.நபீஸ் அஹமத்,பாடகர்கள் 
ஆர்.பாபு,பா.தாமரைச்
செல்வி,கே.விமலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதுகலை ஆசிரியர்கள் க.செந்தில்குமார், விஜய் ஆனந்த், காமராஜர் தொண்டு மன்ற தலைவர் கோ.ஜெயவேலு,
தமிழ்நாடு அறிவியல் இயக்க வேலூர் மாவட்ட துணைத் தலைவர் முனைவர் வே.வினாயகமூர்த்தி  மற்றும் கவிஞர் ருத்ர பாரதி ஆகியோர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள். இந்நிகழ்வில்  பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் கவிதை வாசிப்பு, உரைவீச்சு, ஓவியம் வரைதல் மற்றும் பாடல்களை பாடுதல் போன்றவற்றை நிகழ்த்தி விழாவை சிறப்பித்தனர். தமிழ்நாடு அறிவியல் இயக்க  முன்னோடி கவிஞர் முல்லைவாசன்  அவர்களின் விழா சிறப்புரையாற்றி பள்ளி மாணவர்கள் மற்றும்  ஆசிரியர்களுக்கு நினைவுப்  பரிசு வழங்கி சிறப்பித்தார்கள். இந்நிகழ்வில் 50 க்கும் மேற்ப்பட்ட மாணவர்கள், ஆசிரியர்கள், மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன் 

No comments:

Post a Comment

Post Top Ad