கஞ்சா வியாபாரிகள் 2 பேர் குண்டர் சட்டத்தில் சிறையிலடைப்பு
குடியாத்தம், செப். 5
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே கஞ்சா வியாபாரிகள் 2 பேர்
குண்டர் சட்டத்தின்கீழ் ஓராண்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
குடியாத்தம் நெல்லூர்பேட்டை, தனலட்சுமி நகரைச் சேர்ந்த சுகுமார் மகன் பிரசாந்த்(வயது 20). நெல்லூர்பேட்டை மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த பாபு
மகன் மனோஜ்குமார்(வயது 22) இவர்கள் இருவரும் தனித்தனியாக கஞ்சா விற்பனை செய்து வந்தார்கள்.
கஞ்சா விற்றதாக இவர்கள் மீது பல்வேறு வழக்குகள் நிலையில் உள்ளன. கடந்த சில நாள்களுக்கு முன் கஞ்சா விற்றதாக இவர்கள் இருவரையும் நகர போலீஸார்
கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இவர்கள் தொடர்ந்து கஞ்சா விற்பனை செய்வதால், குண்டர் சட்டத்தின்கீழ்
சிறையில் அடைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.மதிவாணன், மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். பரிந்துரையை ஏற்ற மாவட்ட ஆட்சியர் வி.ஆர்.சுப்புலட்சுமி, இருவரையும் குண்டர் சட்டத்தின்கீழ் ஓராண்டு சிறையில் அடைக்க வியாழக்கிழமை உத்தரவு பிறப்பித்தார்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment