கல்லூரி மாணவன் தூக்கிட்டு தற்கொலை! போதை பழக்கத்தால் ஏற்பட்ட சோதனை! பெற்றோர்கள் வேதனை!
குடியாத்தம் செப்.5-
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அசோக் நகர் மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்த அன்பு குமார் என்பவரின் மகன் சச்சின் (வயது 19) கல்லூரி படிப்பின் போது தீய நண்பர்களுடன் பல்வேறு போதைப் பழக்கத்திற்கு அடிமையான கல்லூரி மாணவனை பெற்றோர்கள் திட்டி கண்டித்ததால் மனம் உடைந்து அவர் வீட்டில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் .தகவல் அறிந்ததும் நகர போலீசார் உடனடியாக சென்று கல்லூரி மாணவனின் சடலத்தை மீட்டு உடல் கூறு ஆய்வுக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு தீவிர விசாரணை செய்து வருகிறார்கள்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment