அத்தி கல்வி குழுமத்தின் சார்பில் ஆசிரியர் தின விழா கொண்டாட்டம்.
குடியாத்தம் செப். 5-
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த
காக்கா தோப்பில் அமைந்துள்ள அத்தி கல்விக் குழுமத்தின் சார்பில் ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டது .அத்தி மருத்துவமனையின் தலைமை மருத்துவர் சிறுநீரக வியல் நிபுணர் டாக்டர் p.சௌந்தரராஜன் அவர்கள் ஆசிரியர் தின வாழ்த்துகள் தெரிவித்தார். இதில் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்ட காங்கிரஸ் மூத்த தலைவரும் தகைசார் தமிழர் விருதுபெற்ற முனைவர் குமரி அனந்தன் அவர்கள் கலந்துக் கொண்டு ஆசிரியர்களுக்கு வாழ்த்துகளையும் நினைவு பரிசையும் வழங்கி கற்றது கைம்மண் அளவு, கல்லாதது உலகளவு என தன் அறிவை பெருக்கிகொள்ளுமாறு கேட்டுக்கொண்டார் . மேலும் அத்தி மருத்துவமனையின் கிளை தலைமை மருத்துவர் ஆ கென்னடி அவர்கள் முன்னிலை வகித்தார். குடியாத்தம் பாலிடெக்னிக் கலலூரி முதல்வர் k. குமரவேல் , அத்தி இயற்கை மற்றும் யோகா மருத்துவ கலலூரி முதல்வர் டாக்டர் k .தங்கராஜ் , அத்தி செவிலியர் கல்லூரி முதல்வர் டாக்டர் பால்ராஜ் சீனித்துரை ஆகியோர் கலந்துகொண்டனர் . அத்தி கல்லூரியின் மாணவர்கள் சிறப்பு பேச்சு போட்டி நடத்தி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு குமரி அனந்தன் அவர்கள் வழங்கினார் .ஆசிரியர்கள், மருத்துவர்கள் , பேராசிரியர்கள் , விரிவுரையாளர்கள் ஆகியோர் கலந்துக் கொண்டு ஆசிரியர் தினத்தை சிறப்பாக கொண்டாடினார்கள் .
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment