30-க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளி கைது! அவர்களிடமிருந்து பல்வேறு பொருட்கள் பறிமுதல் - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday 15 September 2024

30-க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளி கைது! அவர்களிடமிருந்து பல்வேறு பொருட்கள் பறிமுதல்

குடியாத்தம் செப்.15-

 தங்கம் வெள்ளி மற்றும் கேஸ் ஸ்டவ், டிவி, வால் கிளாக் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள் பறிமுதல் 

வேலூர் மாவட்டம் குடியாத்தம நகரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து குற்ற சம்பவங்கள் அதிகரித்த நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் உத்தரவின் பேரில் குடியாத்தம் நகர ஆய்வாளர் பார்த்தசாரதி தலைமையிலான போலீசார் இன்று குடியாத்தம் அடுத்த கார்த்திகேயபுரம் பேருந்து நிலையம் அருகே வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர் 

அப்பொழுது இருசக்கர வாகனத்தில் சந்தேகத்திற்கிடமாக வந்த நபரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் அவன் முண்ணுக்குப் பின் முரணாக பதில் அளித்தான் இதனையடுத்து அவனை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில் அவன் காடை மோகன் என்கிற மோகன் (வயது 37) என்பதும் இவன் ஏற்கனவே கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் ஈடுபட்டதும் பல முறை சிறைக்குச் சென்று வந்ததும் இவன் மீது 30க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் பல்வேறு காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளது விசாரணையில் தெரிய வந்தது 

மேலும் தீவிர விசாரணை மேற்கொண்டதில் சென்னராயனப்பள்ளி பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளி முதல்வர் வீட்டில் திருடியதும் பசுமாத்துர் மற்றும் வளத்தூர் பகுதிகளில் திருடியதும் தெரியவந்தது 

இதனையடுத்து அவனிடமிருந்து 56 கிராம் தங்கம் 500 கிராம்  வெள்ளி  இருசக்கர வாகனம் எல் இ டி டிவி வால் கிளாக் கேஸ் ஸ்டவ் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்து மேலும் அவனை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன் 

No comments:

Post a Comment

Post Top Ad