தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் சார்பில் முன்னெடுக்கப்பட்டுள்ள இளைஞர்கள் எழுச்சி பயணம் திட்டத்தின் துவக்கம் - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday 1 September 2024

தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் சார்பில் முன்னெடுக்கப்பட்டுள்ள இளைஞர்கள் எழுச்சி பயணம் திட்டத்தின் துவக்கம்

தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் சார்பில் முன்னெடுக்கப்பட்டுள்ள இளைஞர்கள் எழுச்சி பயணம் திட்டத்தின் துவக்க விழா 

குடியாத்தம் செப் 1 

வேலூர் மத்திய மாவட்டத்தில் ஆகஸ்ட் 29 வியாழக்கிழமை காலை 10 மணியளவில் வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகர பகுதியில் உள்ள கருடா மஹாலில் நடைப்பெற்றது. நிகழ்விற்கு வேலூர் மத்திய மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் என்.எம்.டி.விக்ரம் தலைமை தாங்கினார். மாவட்ட பொது செயலாளர் ராகேஷ், குடியாத்தம் சட்டமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராகுல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர் டாக்டர். நவீன் பிரபு வரவேற்புரை ஆற்றினார். வேலூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்  ஜி.சுரேஷ்குமார் துவக்க உரையாற்றினார். இளைஞர்கள் எழுச்சிப் பயணம் திட்டத்தை தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவர் விச்சு (எ) லெனின் பிரசாத் துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். நிகழ்வில் அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் செயலாளர்களும், தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் பொறுப்பாளர்களுமான வைஷாக், ஷாகரிகா ராவ், மாநில இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் சூர்ய பிரகாஷ், விஜய் ஆகியோர் விளக்கவுரை ஆற்றினர்.
நிகழ்வில் மாநில பேச்சாளர் நாட்டாம்கார் அப்துல் அக்பர், வேலூர் மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர்  கிருஷ்ணவேணி ஜலந்தர், முன்னாள் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.மோகன்ராஜ், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஆடிட்டர். கிருபானந்தம், குடியாத்தம் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் விஜயன், குடியாத்தம் வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் வீராங்கன், ஜோதி கணேசன், மாவட்ட பொதுச் செயலாளர் பாரத் நவீன்குமார் ஆகியோர் எழுச்சியுரையாற்றினர்.நிகழ்வில் வட்டார தலைவர்கள் சங்கர், செல்வகுமார், விஜயகுமார், தனசேகர் பள்ளிகொண்டா பேரூர் காங்கிரஸ் கமிட்டி தலைவர் அக்பர் பாஷா, மாவட்ட மகளிர் காங்கிரஸ் தலைவர் கோமதி குமரேசன், மாவட்ட எஸ்ஸி பிரிவு தலைவர் அன்பரசன், மாவட்ட தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடக பிரிவு தலைவர் யுவராஜ், மாவட்ட விவசாய பிரிவு தலைவர் ராஜசேகரன், மாவட்ட RGPRS தலைவர் ஆனந்தவேல், மாவட்ட ஊடகப்பிரிவு தலைவர் ஆடிட்டர் ஹரிபாபு, மாவட்ட ஓபிசி பிரிவு தலைவர் ஜலேந்திரன், மாவட்ட கலை பிரிவு தலைவர் காத்தவராயன், மாநில எஸ்ஸி பிரிவு செயலாளர் சுப்பிரமணி, மாவட்ட நிர்வாகிகள் விஜயேந்திரன், முனுசாமி, தேவகிராணி ராஜேந்திரன், பாஸ்கரன், காமராஜ், சரவணன் மாநில பொதுக்குழு உறுப்பினர் விஜய் பாபு உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர். முடிவில் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகி சிக்கந்தர் பாஷா நன்றியுரை கூறினார்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன் 

No comments:

Post a Comment

Post Top Ad