செவிலியர் மருத்துவ கல்லூரியின் மாணவி பாலியல் சீண்டல் அரசு மருத்துவர் வலை வீச்சு - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday 1 September 2024

செவிலியர் மருத்துவ கல்லூரியின் மாணவி பாலியல் சீண்டல் அரசு மருத்துவர் வலை வீச்சு

செவிலியர் மருத்துவ கல்லூரியின் மாணவி பாலியல் சீண்டல் அரசு மருத்துவர் வலை வீச்சு செவிலியர்
 கல்லூரி மாணவி புகாரில் 


குடியாத்தம் செப்  1


வேலூர் மாவட்டம் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் பயிற்சிக்கு வந்த செவிலியர் கல்லூரி மாணவி பாலியல் சீண்டலில் ஈடுபட்ட அரசு மருத்துவர் மீது காவல்துறையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது புகாருக்கு உள்ளான அரசு மருத்துவர் தலைமறைவான நிலையில் அவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் தனியார் செவிலியர் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த காட்பாடியை சேர்ந்த மாணவி ஒருவர் கடந்த சில மாதங்களாக பயிற்சியில் இருந்து வந்துள்ளார் அவரது பயிற்சி காலம் நேற்று முன்தினம் முடிந்த நிலையில் அவரது செயல்பாடுகள் தொடர்பான சான்று பெறுவதற்கு மருத்துவமனையின் மூத்த மருத்துவர் எலும்பு முறிவு சிகிச்சை நிபுணருமான டாக்டர் பாபுவின் அறைக்கு சென்றுள்ளார் அப்போது மாணவியரிடம் பாலியல் ரீதியான சீண்டலில் பாபு ஈடுபட்டுள்ளார் அதிர்ச்சியில் அங்கிருந்து வெளியேறிய மாணவி அரசு மருத்துவமனையில் பணியாற்றி வரும் செவிலியர் ஒருவரிடம் டாக்டர் பாபு நடந்து கொண்ட விதம் குறித்து அழுது கொண்டே கூறிவிட்டுச் சென்றுள்ளார் மேலும் மருத்துவமனையில் தனக்கு நடைபெற்ற பாலியல் சீண்டல்  குறித்து  பெற்றோரிடமும் மாணவி கூறி உள்ளார் இந்நிலையில் குடியாத்தம் நகர காவல் நிலையத்தில் தனது பெற்றோருடன் நேற்று வந்த மாணவி அரசு மருத்துவர் பாபு மீது பாலியல் சேர்ந்த புகார் அளித்துள்ளார் அதன் பெயரில் டாக்டர் பாபு மீது காவல்துறையின் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர் இதற்கு இடையில் புகார் குள்ளான டாக்டர் பாபு திடீரென்று தலைமறைவாகி விட்டார் காவல்துறையினர் அவரைத் தேடி வருகின்றனர்


குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன் 

No comments:

Post a Comment

Post Top Ad