குடியாத்தம் செப்.6-
வேலூர் மாவட்டம்
குடியாத்தம் அருகே உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு டிப்ளமோ நர்சிங் படித்து வரும் மாணவி குடியாத்தம் அரசு மருத்துவமனையில் பயிற்சிக்காக சென்று வந்துள்ளார் இதனிடையே நேற்றுடன் பயிற்சி முடிந்தவுடன் இரண்டு மாதமாக பயிற்சி மேற்கொள்ளப்பட்டதற்கான சான்றிதழில் கையெழுத்து பெறுவதற்காக குடியாத்தம் தலைமை மருத்துவமனையில் எலும்பு முறிவு சிறப்பு மருத்துவர் பாபுவிடம் கையெழுத்து பெற சென்றதாக கூறப்படுகிறது அப்போது டாக்டர் பாபு மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக தெரிகிறது இதையடுத்து அந்தப் பெண் பெற்றோரிடம் நடந்ததை தெரிவித்துள்ளார்
இதனையடுத்து நர்சிங் மாணவி கொடுத்த புகாரின் பேரில் குடியாத்தம் நகர போலீசார் பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள டாக்டர் பாபுவை போலீசார் தேடிவந்த நிலையில் நேற்று மாலை திருச்சி மாநகரில் பிடிபட்டார் அவரை குடியாத்தம் நீதி மன்றத்தில் இன்று ஆஜர் படுத்தினார்கள்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment