அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கூண்டோடு விலகல்! - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 19 September 2024

அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கூண்டோடு விலகல்!

அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கூண்டோடு விலகல்

குடியாத்தம் செப்.19-

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் உள்ள அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா செய்து தாயக்கழகமான அதிமுகவில் சுமார் 150 க்கும் மேற்பட்டவர்கள் கழகத்தில் இணைந்தனர் .பேரறிஞர் அண்ணா அவர்களின் 116 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு குடியாத்தம் புதிய பஸ் நிலையம் அருகே மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

பொதுக் கூட்டத்திற்கு அதிமுக நகர கழக செயலாளர் ஜே கே என் பழணி  தலைமை தாங்கினார் .இக்கூட்டத்தில் சேவல் நித்தியானந்தம் ஏற்பாட்டில் சுண்ணாம்புப்பேட்டை பகுதியில் உள்ள இ ஆர் மேகநாதன்  பாண்ட்ஸ் சரவணன் கோகிலா உள்ளிட்டோா்  முன்னாள் அமைச்சர்கள் கேசி வீரமணி ப மோகன் வேலூர் புறநகர் மாவட்ட கழக செயலாளர் த வேலழகன் கழக 
அப்போது அமைப்பு செயலாளர் வி ராமு ஆகியோர் முன்னிலையில் தாய் கழகமான அதிமுகவில் இணைந்தனர் அப்போது ஜெயக்குமார் ஜெகதீசன் விஜயகுமார் குடியாத்தம் குமார் மெடிக்கல் மோகன்கு மார் துரைராஜ்  தீனதயாளன் சுரேஷ்குமார் முனிரத்தினம் மகேந்திரன் விநாயகம் காந்தி நவீன் உட்பட ஏராளமானோர் உடன் இருந்தனர்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன் 

No comments:

Post a Comment

Post Top Ad