போதை மாத்திரைகள் மற்றும் ஊசிகள் பயன்படுத்திய கல்லூரி மாணவர் உட்பட ஐந்து பேர் கைது! - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday 12 September 2024

போதை மாத்திரைகள் மற்றும் ஊசிகள் பயன்படுத்திய கல்லூரி மாணவர் உட்பட ஐந்து பேர் கைது!

குடியாத்தம் செப்.12-

வேலூர் மாவட்டம் குடியாத்தம் 
போதை மாத்திரைகள் மற்றும் ஊசிகள் பயன்படுத்திய கல்லூரி மாணவர் உட்பட ஐந்து பேர் கைது

 வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த தட்டப்பாறை பகுதியில் போதை ஊசி மற்றும் போதை மாத்திரைகளை பயன்படுத்திய வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது அதன் அடிப்படையில் கிராமிய காவல் ஆய்வாளர் சாந்தி தலைமையில் உதவி ஆய்வாளர்கள் சந்திரசேகர் பழனியப்பன் காவலர் ராமு உள்பட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போதை மாத்திரைகளை மற்றும் ஊசிகளை பயன்படுத்தி வந்த கல்லூரி மாணவர்கள் அப்பு (எ) கமல் ராஜ் (வயது 25)விக்னேஷ் (வயது20) சாம் (வயது 19) சாரதி (வயது 22) மற்றும் 18 வயது கல்லூரி மாணவண் உட்பட ஐந்து பேர் கைது இவர்களிடமிருந்து 10 போதை ஊசிகள்  5 போதை மாத்திரைகள் மற்றும் ஊசிகள் பறிமுதல் செய்து குடியாத்தம் தாலுகா போலீசார் விசாரணை.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன் 

No comments:

Post a Comment

Post Top Ad