மதுபானங்கள் பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்த பெண் கைது
குடியாத்தம் செப்.16-
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த சேம்பள்ளி ஏரிகொல்ல பகுதியில் வசிப்பவர் பத்மாவதி க/ பெ வெங்கடேசன் (வயது60)
இவர் அரசு மதுபானங்களை வீட்டில் பதுக்கி வைத்து கொண்டு கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது அதன் அடிப்படையில் குடியாத்தம் கிராமிய காவல் ஆய்வாளர் சாந்தி தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்ததில் இவர் மதுபானங்களை விற்பனை செய்வது தெரிய வந்தது மேலும் இவருக்கு உடந்தையாக இருந்த மகன் கோவிந்தராஜ் தப்பி ஓட்டம் பார்வதியை கைது செய்து அவரிடமிருந்து 35 மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment