காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் பெயரில் வேலூர் அடுத்த காட்பாடியில் போதை ஊசி விற்பனை வாலிபர்கள் கைது! - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday 2 September 2024

காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் பெயரில் வேலூர் அடுத்த காட்பாடியில் போதை ஊசி விற்பனை வாலிபர்கள் கைது!

வேலூர் அடுத்த காட்பாடியில் போதை ஊசி விற்பனை? வாலிபர்கள் கைது!

காட்பாடி செப் 2 

வேலூர் மாவட்டம் அடுத்த காட்பாடி திருவள்ளுவர் நகர் சின்னபள்ளிக்குப்பம் ரோடு பகுதியில் சிலர் போதை ஊசி தயாரித்து பயன்படுத்துவதாக காட்பாடி காவல்துறைக்கு தகவல் கிடைத்தது, அதன் அடிப்படையில் அப்பகுதியில் காவல் துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டதில் 2 வாலிபர்களை சுற்றி வளைத்து கைது செய்து தொடர்ந்து அவர்களிடம் காவல்துறை மேற்கொண்ட விசாரணையில் அணைக்கட்டு தாலுக்கா ஒதியத்தூர் அடுத்த ராஜபுரம் பகுதியை சேர்ந்த லட்சுமிகாந்த் ( வயது 26 ) வேலூர் கொசப்பேட்டை யை சேர்ந்தபரத் (வயது 28) என்பது தெரியவந்தது மேலும் கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து போதை ஊசிக்கு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட 69 மாத்திரைகள் 5 சிரஞ்சுகள் ஊசி போட மருந்து கலக்கும் பிளாஸ்டிக் கப் உள்ளிட்டவைகளை காவல்துறையினர் கைப்பற்றி பின் கைது செய்தனர் போதை ஊசி தயாரித்த இவர்கள் பயன்படுத்துவது மட்டுமின்றி இவர்களை தேடிவரும் கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்கள், நண்பர்களுக்கு போதை ஊசி விற்பனை செய்து, வந்தது தெரியவந்துள்ளது தொடர்ந்து 2 பேரை காட்பாடி நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

வேலூர் தாலுகா செய்தியாளர் இன்பராஜ் 

No comments:

Post a Comment

Post Top Ad