மாவட்ட காவல் அலுவலகத்தில் கண்காணிப்பாளர் தலைமையில் பொதுமக்கள் குறை தீர்வு நாள்.
வேலூர் செப்.4-
வேலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N.மதிவாணன் அவர்களின் தலைமையில் பொதுமக்கள் குறைதீர்வு நாள் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமையன்று நடத்தப்பட்டு வருகிறது. இந்த சிறப்பு மனு நாளில் பொதுமக்கள் தங்கள் குறைகளை மனுக்களாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் நேரில் அளித்து குறைகளை கூறி வருகின்றனர், அது மட்டுமின்றி வாரத்திலுள்ள அனைத்து வேலை நாட்களிலும் பொதுமக்களின் மனுக்களை நேரில் பெற்று உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு, பொதுமக்களின் பிரச்சனைகள் தீர்க்கப்பட்டு வருகின்றது. இன்று 04.09.2024-ம் தேதி நடைபெற்ற சிறப்பு பொதுமக்கள் குறை தீர்வு மனு நாளில் 49 மனுக்கள் பெறப்பட்டு மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு தெரிவித்துக்கொண்டார். அவர்கள் உடன் இருந்தார் நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணை காவல் கண்காணிப்பாளர் சாரதி உடன் இருந்தார்.
வேலூர் தாலுகா செய்தியாளர் இன்பராஜ்
No comments:
Post a Comment