ஆதிதிராவிடர் காலனி என்றால் அனைவருக்கும் அலட்சியமே எடுத்துக்காட்டாக கழிவு நீர்!
அணைக்கட்டு செப்.8-
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு வட்டம் சத்தியமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட ஆதிதிராவிட காலனி பகுதியில் அமைந்துள்ள அங்கன்வாடி மையத்தை சுற்றி போதிய கால்வாய் இணைப்பு வசதி இல்லாமல் கழிவு நீர் குளம் போல் தேங்கி ஆறு போல் வீதி முழுக்க செல்கின்றது.
இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் மிகவும் நோய் தொற்றுக்கும் அபாயகரமாக உள்ள சுகாதார சீர்கேடு ஏற்படும் அளவிற்கு மிகவும் மோசமாக இருக்கிறது.
இதனை பலமுறை எடுத்துக் கூறியும் புகார் மனு அளித்தும் நிரந்தர தீர்வு காணவில்லை குறிப்பாக கடந்த வாரத்திற்கு முன் இதேபோல் இந்த நிலைமை ஏற்பட்டது இதை பார்வையிட்ட வட்டார வளர்ச்சி அலுவலர் தற்போது தேங்கியிருந்த கழிவு நீரை மோட்டார் மூலமாக எடுத்து சென்றார் ஆனால் இரண்டு நாள் பெய்த மழையில் திரும்பவும் அதைவிட அதிகமான அளவிற்கு கழிவு நீர்த்தேங்கி வீடுகளுக்குள் புகுந்து கொண்டிருக்கிறது நோய் தொற்று வராமல் உடனடியாக நடவடிக்கை சமூக ஆர்வலர்களின் சார்பிலும் மற்றும் தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சட்டவிப்புணர்வு இயக்கம் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பிலும் கோரிக்கை மனு
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
No comments:
Post a Comment