பள்ளியில் நடைபெற்ற கராத்தே பயிற்சி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பெல்ட் மற்றும் பரிசுகள் வழங்கும் விழா.
காட்பாடி செப்.9-
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த தனியார் பள்ளியில் நடைபெற்ற கழக பயிற்சி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பெல்ட் மற்றும் பரிசுகள் வழங்கும் விழா நடைபெற்றது.
காட்பாடி அடுத்த விஐடி அருகே உள்ள வில்லியம் பள்ளியில் நேற்று மாலை 6 மணி அளவில் நடைபெற்ற கராத்தே பயிற்சி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பெல்ட் மற்றும் பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளராக மக்கள் புரட்சி கழகம் மாநில தலைவர் மா ப வர்கீஸ் MA LLB. திரைப்பட இயக்குனர் கோபிநாத் நாயனார் ஜெயக்குமார் வழக்கறிஞர் காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் மக்கள் புரட்சிக் கழக வேலூர் மாவட்ட செயலாளர் அன்பரசன் சிறப்படைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள் இந்நிகழ்ச்சியில் மாணவ மாணவிகளுக்கு தற்பாதுகாப்பு கலைகளின் சிறப்பு அம்சங்களை குறித்து மா ப வர்கீஸ் மற்றும் இயக்குனர் கோபி நாயினர் சிறப்புரையாற்றினர்.
மாணவ மாணவிகள் சாகச நிகழ்ச்சிகளும் நடைபெற்றன பெற்றோர்களும் ஆர்வமுடன் கண்டுபிடித்தனர் கராத்தே பயிற்சியாளர் மகேஷ் நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பு செய்து முடிவில் நன்றி கூறி நிகழ்ச்சி நிறைவு பெற்றது.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
No comments:
Post a Comment